Paper 4 தமிழ் கற்பித்தல் பகுதி 2 (பாடத்தேர்ச்சி)
வினாவின் வகைகள்:
வினா ஆறுவகைப்படும்.
அவை
அறிவினா, அறியாவினா, ஐயவினா ,கொளல்வினா, கொடைவினா ,ஏவல்வினா என்பன.
அறிவினா:
தனக்குத் தெரிந்த ஒன்றை பிறருக்கு தெரியுமா என்று அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா எனப்படும்.
(எ.கா)
திருக்குறளை இயற்றியவர் யார்?என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது.
அறியாவினா:
தான் அறியாத ஒரு பொருளை அறிந்துக் கொள்வதற்காக ப் பிறரிடம் வினவுவது அறியாவினா.
(எ.கா)
எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவையென மாணவன் ஆசிரியரிடம் வினவுவது.
ஐயவினா:
தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வற்காக வினாவப்படும்
வினா ஐயவினா.
(எ.கா)
அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?
கொளல்வினா:
தான் ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா கொளல்வினா.
(எ.கா)
பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.
கொடைவினா:
தான் ஒருப் பொருளைக் கொடுப்பதற்காக அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிடம் வினவுவது, கொடைவினா.
(எ.கா)
மாணவர்களே !உங்களுக்குச் சீருடை இல்லையா?
ஏவல்வினா:
ஒரு தொழிலைச் செய்யும்படி
ஏவும் வினா ஏவல்வினா.
(எ.கா)
முருகா சாப்பிட்டாயா?
Comments
Post a Comment