Paper 4 தமிழ் கற்பித்தல் பகுதி 2 (பாடத்தேர்ச்சி)
வினாவின் வகைகள்: வினா ஆறுவகைப்படும். அவை அறிவினா, அறியாவினா, ஐயவினா ,கொளல்வினா, கொடைவினா ,ஏவல்வினா என்பன. அறிவினா: தனக்குத் தெரிந்த ஒன்றை பிறருக்கு தெரியுமா என்று அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா எனப்படும். (எ.கா) திருக்குறளை இயற்றியவர் யார்?என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது. அறியாவினா: தான் அறியாத ஒரு பொருளை அறிந்துக் கொள்வதற்காக ப் பிறரிடம் வினவுவது அறியாவினா. (எ.கா) எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவையென மாணவன் ஆசிரியரிடம் வினவுவது. ஐயவினா: தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வற்காக வினாவப்படும் வினா ஐயவினா. (எ.கா) அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ? கொளல்வினா: தான் ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா கொளல்வினா. (எ.கா) பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா. கொடைவினா: தான் ஒருப் பொருளைக் கொடுப்பதற்காக அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிட