PAPER 4 LANGUAGE ACROSS THE CURRICULUM
பாடமொழியாகத் தமிழ்
தாய்மொழியையே பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவம் உள்பட அனைத்துப் படிப்புகளும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும்.
சொல்லாக்கம் : மறு பரிசீலனை
ஒரு நாட்டின் அறிவியல் தொழில் நுட்பம் பெருக வேண்டுமாயின் தாய்மொழி மூலம் கற்றல் அவசியம் என்பது அறிஞர்களால் வலியுறுத்தப்படுகின்றது. தமிழைப் பொறுத்தவரையில் பாடமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் சட்டப் பூர்வமாக அமல் படுத்தியும், இன்றும் உயர்கல்வியில் தமிழ் என்பது சாத்தியமற்று உள்ளது. இந்நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. சமூக, அரசியல் காரணங்கள் முதன்மையிடம் வகிக்கின்றன. ஆங்கிலம், ஜப்பான் போன்ற மொழிகளில் வழக்கிலிருக்கும் பல்வேறு துறைக் கலைச்சொற்களுக்கு நிகரான சொற்கள் தமிழில் பெரிய அளவில் இல்லை என்பது துறை வல்லுநர்களின் கருத்து. அதாவது தமிழில் இதுவரை செய்யப்பட்டுள்ள சொல்லாக்க முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதாகும். எனவே சொல்லாக்கத்தில் இதுவரை நடைபெற்றுள்ளவற்றை ஆழமான ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுது தான் சொல்லாக்கத்தில் ஏற்பட்டுள்ள சாதனைகள், தேக்கநிலை போன்றவற்றை மதிப்பிட இயலும். மேலும் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய செயல்களும் திட்டமிடுதலும் முறையாக நடைபெற இயலும்.
Comments
Post a Comment